Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தா.. வந்துட்டாங்கல்ல.. நான்-வெஜ் டெலிவரி கூடாது.. பாஜக ஆளும் மாநிலங்களில் சிக்கிய ஜொமாட்டோ

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் உத்தர பிரதேசம் உள்பட பாஜக ஆளும் 5 மாநிலங்களில் ‛‛அசைவ உணவு டெலிவரி செய்யாதீங்க'' என ஜோமட்டோ நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்த தகவல் வெளியாகி உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிரதமர் மோடி செய்தார். அதன்பிறகு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது.

5 BJP ruled states asked to Zomato not to sale non vegetarian food on Ayodhya Ram Temple Inauguration day

அயோத்தி ராமர் கோவிலில் இன்று முதல் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். காலை முதல் மக்கள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது. காலையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இன்று முதல் இன்னும் 2 வாரங்கள் வரை தினமும் 5 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினமான நேற்று பாஜக ஆளும் 5 மாநிலங்கள் சார்பில் ஜோமட்டோ நிறுவனத்திடம் அசைவ உணவு டெலிவரி செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது. அதாவது அயோத்தி அமைந்துள்ள உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலங்கள் சார்பில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பொதுமக்களுக்கு அசைவ உணவு டெலிவரி செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஜோமட்டோ நிறுவனமும் ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் Zomato Care எனும் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஹாய், அரசு வழங்கிய நோட்டீஸ் அடிப்படையில் உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அசைவ உணவு டெலிவரி செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம். இந்த அறிவிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்'' என தெரிவித்தது. மேலும் அசைவ உணவு டெலிவரி செய்வதையும் நிறுத்தியது.

முன்னதாக இன்னொரு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், ‛‛உத்தர பிரதேசத்தில் ஜனவரி 22ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் உங்களின் அசைவ உணவு ஆர்டர்கள் நிறுத்தப்படுவதோது, இந்த ஆர்டர்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் மாநில அரசு மற்றும் ஜோமட்டோ நிறுவனத்தின் இந்த செயலை நெட்டிசன்களில் ஒரு பகுதியில் வரவேற்றுள்ள வேளையில் இன்னொரு தரப்பு கொந்தளித்துள்ளனர். Mrinal என்பது தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛புதிய இந்தியாவிற்கு வரவேற்கிறோம். இப்போது உணவை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட நம்மிடம் இல்லை. பெரும்பான்மையாக இருப்பவரை திருப்திப்படுத்த வணிகங்கள் பாதிக்கப்படுகிறது. இது ஒரு பாசிச நாடு. ஜோமட்டோ மற்றும் ஸ்விக்கிற்கு இது அவமானம்'' என கோபத்தை கொப்பளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+