காஷ்மீரில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.. 8 வீரர்கள் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதேநேரம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 8 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

ஸ்ரீநகருக்கு தெற்கே 30 கிமீ தொலைவில் பாம்போரில் பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனத்தின் மீது பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர், இந்த சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 2 நாட்களில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட 4-வது தாக்குதலாகும் இது. இதில் 3 தாக்குதல்கள் சோபோரில் நடந்தது. ஐ.இ.டி. ஒன்று ஸ்ரீநகரில் செயலிழப்புச் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications