'போண்டா' பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க மறுப்பு- 5 ஆசிரியர்கள் சஸ்பென்ட்!
மல்காங்கிரி: ஒடிஷாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடி இனத்தின் குழந்தைகளுக்கு சரியாக கல்வி கற்பிக்காமலும் அவர்களை புறக்கணிப்பதுமாக இருந்த 5 ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள மல்காங்கிரி மாவட்டம் போண்டோ குன்றுகளில் மட்டுமே போண்டோ இனப்பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். அனைத்து பழங்குடி இனத்தவரிடத்தில் இருந்தும் மிகவும் தனித்தவர்களாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.இப்பகுதி மாவோயிஸ்டுகளின் கோட்டையாகும்.
இவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றை மாநில அரசு நடத்தி வருகிறது. இதில் 180 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
இந்த பிரச்சனை குறித்து போண்டா பழங்குடி இனத்தில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பரு சிசா, முதல்வர் நவீன் பட்நாயக்கின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதையடுத்து அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது.
மல்காங்கிரி மாவட்ட ஆட்சியர் பிரசாத் குமார் இந்த விசாரணையை நடத்தினார். அப்போதுதான் மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்காதது, பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்கள் ஒழுங்காக வராதது உள்ளிட்ட பல புகார்கள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் 5 ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications