நாளிதழ்களில் இன்று: ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலம்
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமணி - ஆந்திர ஏரியில் தமிழர்களின் சடலம்
ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராமர் கோயில் ஏரியில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அச்செய்தி விவரிக்கிறது.
செம்மரம் வெட்ட வந்த இடத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க ஏரியில் குதித்த போது அதில் மூழ்கி உயிரிழந்தனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி: வங்கி விவகாரம் - பிரதமர் மவுனம் கலைக்க வேண்டும்
வங்கி மோசடி விவகாரத்தில் பிரதமர் மோதியும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் தங்களது மௌனத்தை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, வங்கியில் நடந்த 22 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு பிரதமர் மோதியும் நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளதாக மேலும் அந்த செய்தி விவரிக்கிறது.
தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள கார்டூன்
தி இந்து (ஆங்கிலம்) காவிரி மேலான்மை வாரியம் அமைப்பதே தீர்வு
காவிரி மேலான்மை வாரியம் அமைப்பது மட்டுமே உரிய நேரத்தில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யும் என விவசாயிகள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி (ஆங்கிலம்) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டை விட நல்ல வருடாந்திர மழைப்பொழிவை கர்நாடகா பெறுகிறது என்றும் ஆனால், வடகிழக்கு பருவமழைக்காக தமிழகம் அக்டோபர் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அச்செய்தி விவரிக்கிறது.
இந்நிலையில், தென்மேற்கு பருவ மழையில்தான் நல்ல முறையில் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட முடியும் என்றும் வடகிழக்கு பருவமழை என்பது கூடுதலான ஒன்றுதான் என்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்ததாகவும் மேலும் இந்த செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
- கமல் அரசியல் பிரவேசம்: கருணாநிதி, ரஜினியுடன் ஒரே நாளில் சந்திப்பு
- அன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம்
- இரான்: விமானம் மலையில் மோதி 66 பேர் பலி
- உங்கள் புகைப்படங்கள் பிபிசி தமிழில் வெளியாக இதோ ஓர் அரிய வாய்ப்பு!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications