For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூனியக்காரர்களோ? ஜார்க்கண்ட்டில் சந்தேகத்தின் பேரில் 5 பெண்கள் அடித்துக் கொலை!!

By Mathi
Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைப்பதாக சந்தேகித்து நேற்று இரவு 5 பெண்களை உள்ளூர் மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் அருகே உள்ள கான்ஜியா கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பல் கைத்தடி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் நேற்று நள்ளிரவில் 5 பெண்களை அடித்துக் கொன்றது.

5 Women Killed in Jharkhand on Witchcraft Allegations

இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த 5 பெண்களும் சூனியக்காரர்கள் என சந்தேகித்தே அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை சூனியம் வைப்பதாக சந்தேகித்து 2,097 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

English summary
Five women have been killed in a village in Jharkhand, 45 kilometres from capital Ranchi, reportedly on allegations of witchcraft.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X