சூனியக்காரர்களோ? ஜார்க்கண்ட்டில் சந்தேகத்தின் பேரில் 5 பெண்கள் அடித்துக் கொலை!!
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைப்பதாக சந்தேகித்து நேற்று இரவு 5 பெண்களை உள்ளூர் மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் அருகே உள்ள கான்ஜியா கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பல் கைத்தடி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் நேற்று நள்ளிரவில் 5 பெண்களை அடித்துக் கொன்றது.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த 5 பெண்களும் சூனியக்காரர்கள் என சந்தேகித்தே அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை சூனியம் வைப்பதாக சந்தேகித்து 2,097 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications