50% எம்.பி.க்களுக்கு சீட் இல்லை.. கல்தா கொடுக்க ராகுல் முடிவு!
டெல்லி: தற்போதைய எம்.பிக்களில் 50% பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரக்கூடாது என்பதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் அதிரடி மாற்றங்களை செய்ய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். மொத்தம் உள்ள 543 தொகுதிகளிலும் ராகுல் ஏற்கனவே ரகசியமாக ஆய்வு செய்து காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளார்.

இதில் 2 முறைக்கு மேல் போட்டி யிட்டு தோற்றவர்கள், வயதானவர்களுக்கு மீண்டும் சீட் இல்லை. தற்போது எதிர்ப்பு அலை வீசுவதால் காங்கிரஸ் எம்.பி.க்களில் ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளானவர்கள், திறமையற்றவர்கள், தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற முடியாதவர்கள், தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை திறம்பட செய்யாதவர்கள் பற்றிய பட்டியலையும் ராகுல் தயாரித்துள்ளாராம். இவர்களுக்கு வரும் தேர்தலில் சீட் கொடுக்கக் கூடாது என்று ராகுல் முடிவு செய்துள்ளாராம்.
இந்த கணக்குப்படி தற்போதைய காங்கிரஸ் எம்.பி.க்களில் 50% பேருக்கு நிச்சயமாக சீட் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. ஊழல் செய்த, திறமையற்ற எம்.பி.க்களை களை எடுத்து விட்டு அந்த இடத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ராகுல் விரும்புகிறார் என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications