For Quick Alerts
For Daily Alerts
Just In
6,750 கிலோ அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல்- 2 பேர் கைது
கல்பெட்டா: கேரள- கர்நாடகா எல்லையில் வெடிபொருட்கள் தயாரிக்க உதவும் 6,750 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைப் பகுதியில் போலீசார் நேற்று இரவு வழக்கமான வாகன சோதனைகளை மேற்கொண்டனர். அப்போதுதான் அம்மோனியம் நைட்ரேட் லாரி சிக்கியது.
அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் முடிகெர தாலுவைச் சேர்ந்த ஹக்கீம் மற்றும் இசாக் ஆகியோர் என தெரியவந்துள்ளது. இருவரும் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குவாரி ஒன்றுக்காக அம்மோனியம் நைட்ரேட்டை கொண்டுசெல்வதாக தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
More than 6,000 kg of ammonium nitrate, a chemical used in explosives, was seized at Muthanga on the Kerala-Karnataka border and two persons were arrested.
Story first published: Monday, November 11, 2013, 14:16 [IST]