மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்- வடகிழக்கு மாநிலங்கள், மே.வங்கம், பீகார், ஜார்க்கண்ட் அதிர்ந்தன
நேப்பிடா: மத்திய மியான்மரை மையாகக் கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8ஆக பதிவாகி இருந்தது. இதன் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களும் அதிர்ந்தன.
இத்தாலியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதில் 38 பேர் பலியாகினர். 150 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Kolkata: People rush out to the streets after tremors rock the city. #Earthquake pic.twitter.com/CO36KKrxdB
— News18 (@CNNnews18) August 24, 2016
இந்த நிலையில் மத்திய மியான்மரை மையமாகக் கொண்டு இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களும் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் அதிர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டும் அலுவலகங்களை விட்டும் வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
[Read this: பூமிக்கு அடியில் உறங்கும் பயங்கரம்.... ஆய்வாளர்கள் எச்சரிக்கைக்கு டிரெய்லரா 'மியான்மர்' நிலநடுக்கம்?]
ஏற்கனவே வங்கதேசத்தை மையமாகக் கொண்டு உலகின் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கத்தை மியான்மர் எதிர்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.