பூமிக்கு அடியில் உறங்கும் பயங்கரம்.... ஆய்வாளர்கள் எச்சரிக்கைக்கு டிரெய்லரா 'மியான்மர்' நிலநடுக்கம்?
டெல்லி: வங்கதேசம், கிழக்கு இந்தியாவில் பூமிக்கு அடியில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது... இந்த நிலநடுக்கத்தால் வரலாறு காணாத பிரளயத்தை வங்கதேசம், இந்தியா மியான்மர் சந்திக்கப் போகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரித்த ஒரே மாதத்தில் மியான்மரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சர்வதேச புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த மாதம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தனர். அதில், வங்கதேசமும் கிழக்கு இந்தியாவும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப் படுகைகள் மீது அமைந்துள்ளன. இந்த பகுதிகள் நிலநடுக்கத்தை தாங்க முடியாத லேசான பகுதிகள்.

இந்த பகுதிகளில் கீழே உள்ள டெக்கானிக் பிளேட் எனப்படும் தட்டுகளின் அழுத்தம் மிகவும் அதிகரித்து வருகின்றன. இதனால் மிக பயங்கரமான பூகம்பம் ஒன்று ரிக்டரில் 8.2 முதல் 9 அல்லது 9-க்கும் அதிகமான அளவுக்கு பதிவாகும் அபாயம் உள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியாவின் பெரும்பகுதிகளைக் கொண்டுள்ள ராட்சத கண்டத் தட்டு வடக்கு நோக்கி முட்டி மோதி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியா ஒரு மோதல்தான் இமயமலை வளர்வதற்கு காரணமாகவும் இருந்ததாம்....
கடந்த ஆண்டு நேபாளத்தில் 9000 உயிர்கள் பலி கொள்ளப்பட்டதற்கும் இந்த நகர்வுதான் காரணமாம். இதுவரை சிலி பூகம்பம், 2004 சுமத்ரா பூகம்பம்- சுனாமி, 2011-ல் புகுஷிமா பூகம்பம் ஆகியவை பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இனி வங்கதேசத்தை மையமாக கொண்டு உருவாக காத்திருக்கும் கண்டத்தட்டுகளின் அழுத்தம் என்பது சுமார் 400 ஆண்டுகாலமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாகும். இதனால் மிகப் பெரிய பூகம்ப பிரளயத்தை இந்தியா, வங்கதேசம் மட்டுமின்றி மியான்மரும் கூட எதிர்கொள்ளத்தான் போகிறது; சுமார் 14 கோடி பேர் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
[Read this: மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்- வடகிழக்கு மாநிலங்கள், மே.வங்கம், பீகார், ஜார்க்கண்ட் அதிர்ந்தன]
தற்போது மியான்மரில் 6.8 அலகுகளில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்த மிகப் பெரிய பூமி பிரளயத்துக்கு முன்னோட்டமாக இது இருக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
-
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications