For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகன் செய்த தவறுக்காக 60 வயது தாயை நிர்வாணமாக்கி மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததற்கு அவரின் தாயை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்பூர் கேரி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். இதையடுத்து அவர் தனது காதலியுடன் ஊரை விட்டு ஓட்டம்பிடித்துவிட்டார்.

இது குறித்து அறிந்த பெண் வீட்டார் கோபம் அடைந்து நேராக அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வீட்டில் இருந்த வாலிபரின் 60 வயது தாயை வெளியே இழுத்து வந்து அவரது கணவரின் கண் முன்பே அவரை நிர்வாணமாக்கினர்.

மேலும் அவரின் முகத்தில் கரியை பூசியதுடன், அவரது பிறப்புறுப்பில் மிளகாய்பொடியை தூவினர். இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் ஊருக்குள் ஓடி வந்து மக்களிடம் உதவி கேட்டார். அதன் பிறகு மக்கள் வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் 4 பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அந்த 5 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

English summary
A 60-year-old woman was stripped and tortured in a village in Uttar Pradesh on Monday after her son allegedly eloped with a girl, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X