மும்பை குண்டுவெடிப்பில் சிக்கி கோமாவில் சிகிச்சை பெற்றவர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மரணம்..
மும்பை: கடந்த 2006 ஆம் ஆண்டு மும்பை ரயில்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி கோமா நிலைக்கு சென்றவர் நினைவு திரும்பாமலேயே இன்று உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் 2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி, அடுத்தடுத்து ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் தானே மாவட்டத்தின் பயாந்தர் பகுதியைச் சேர்ந்த பராக் சாவந்த் தலையில் படுகாயமடைந்தார்.

மும்பையின் சர்ச் கேட் ரயில் நிலையத்தில் இருந்து விரார் பகுதிக்குச் சென்ற ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு பராக் சாவந்தை, கோமா நிலைக்குத் தள்ளியது.
மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில், கோமா நிலையிலேயே மேல் சிகிச்சை பெற்று வந்த பராக் சாவந்தை, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் நேரில் சந்தித்ததுடன், அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
2008 ஆம் ஆண்டு சாவந்துக்கு நினைவு திரும்பியது. ஆனால் மீண்டும் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது கர்ப்பிணியாக இருந்த பராக் சாவந்தின் மனைவி ப்ரீத்திக்கு, மாநில அரசின் சார்பில் கருணை அடிப்படையில், ரயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனிடையே மருத்துவ உதவியுடன் ப்ரீத்தி தனது மகள் பிரசிதியை பெற்றெடுத்தார். தற்போது 8 வயதாகும், பிரசிதி நினைவு தெரிந்தது முதலே, தனது தந்தையை கோமாவில்தான் பார்த்து வந்தார்.
இந்நிலையில் தனது மகள் முகத்தைக் கூட பார்க்க முடியாமல், 7 ஆண்டுகளாக கோமா நிலையிலேயே இருந்த பராக் சாவந்த் நினைவு திரும்பாமலேயே இன்று காலை உயிரிழந்தார்.
இதன் மூலம், மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் மரணமடைந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications