மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 7 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் 7 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பையின் புறநகரில் உள்ள சாண்டா குரூஸ்-க்கு உட்பட்ட வகோலா பகுதியின் யஷ்வந்த் நகரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

7 dead after apartment building collapses in Mumbai

அங்கு 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தின் கீழ்தளத்தில் வழக்கறிஞர் ஒருவரின் குடும்பம் மட்டும் வசித்து வந்துள்ளது. நேற்று காலை 11 மணி அளவில் திடீரென்று சீட்டுக்கட்டு சரிவது போல, அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 7 பேர் வி.என்.தேசாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கக்கூடும் என தெரியவந்துள்ளதால் மீட்புப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+