காஷ்மீரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.. வைஷ்ணவி தேவி கோயில் பக்தர்கள் உட்பட 7 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பெண் விமானி மற்றும் வைஷ்ணவிதேவி கோயில் பக்தர்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணதேவி கோயில் செல்லும் யாத்ரீகர்களுக்காக தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் சேவைகளை இயக்கி வருகிறது. வைஷ்ணவி தேவி கோயில் இருந்து இன்று 6 பக்தர்களுடன் அந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சாஞ்சி சாட் என்ற இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

கத்ரா என்ற இடம் அருகே இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
இதில் ஹெலிகாப்டரில் இருந்த பெண் விமானி மற்றும் வைஷ்ணதேவி கோயில் பக்தர்கள் 6 பேர் உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications