For Quick Alerts
For Daily Alerts
Just In
மத்தியப் பிரதேச சிறையில் இருந்து 7 'சிமி' தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
போபால்: மத்தியப் பிரதேச மாநில சிறையில் இருந்து சிமி இயக்கத் தீவிரவாதிகள் 7 பேர் தப்பிவிட்டனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கந்துவா சிறைச்சாலையில் சிமி இயக்கத் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 7 தீவிரவாதிகள் இன்று அதிகாலையில் சிறைக் கழிவறையின் சுவற்றை உடைத்துக் கொண்டு தப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சிறையில் இருந்து தப்பித்து செல்ல முயன்ற தீவிரவாதிகளை சிறைக்காவலர்கள் தடுத்துள்ளனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 சிறைக் காவலர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தப்பி ஓடியவர்களில் ஒரு தீவிரவாதியை கைது செய்துள்ள மத்திய பிரதேச போலீசார், மற்ற 6 தீவிரவாதிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Comments
English summary
Seven prisoners escaped from Madhya Pradesh's Khandwa jail in the wee hours on Tuesday.Meanwhile, Khandwa police has managed to arrest one prisoner. According to reports, the seven undertrial prisoners were members of terror outfit SIMI.
Story first published: Tuesday, October 1, 2013, 10:28 [IST]