Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛வரமறுத்த ஆம்புலன்ஸ்’.. மாரடைப்பால் துடித்த தந்தை.. தள்ளுவண்டியிலேயே மருத்துவனை கூட்டி சென்ற சிறுவன்

Subscribe to Oneindia Tamil

போபால்: பணம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஆம்புலன்ஸ் வர மறுத்ததால், நெஞ்சு வலியால் துடித்த தனது தந்தையை 7 வயது மகன் தள்ளுவண்டியில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பரிதாப சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

ஏழை மக்களுக்காகவே கொண்டு வரப்பட்ட அரசு ஆம்புலன்ஸே, தற்போது பல இடங்களில் மக்களிடம் பணம் கேட்பதே இந்த அவலநிலைக்கு காரணமாக உள்ளது.

இந்நிலையில், சிறுவன் தனது தந்தையை தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் இதுகுறித்த விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஏழைகள் என்றால் இளக்காரமா?

ஏழைகள் என்றால் இளக்காரமா?

சமீபகாலமாக, பெரும்பாலான மனிதர்களிடத்தில் மனிதநேயம் என்ற குணமே இல்லாமல் போய்விட்டதாக தோன்றுகிறது. பணம் இருப்பவர்களிடத்திலும், இல்லாதவர்களிடத்திலும் இந்த உலகம் காட்டும் பாரபட்சம் மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்ல பணம் இல்லாததால் இறந்த குழந்தையின் உடலை சுமந்து சென்ற தந்தை; ஆம்புலன்ஸ் வராததால் பிரசவ வலியால் துடித்த மனைவியை கை வண்டியில் இழுத்து சென்ற கூலித்தொழிலாளி என்பன போன்ற கொடுமையான நிகழ்வுகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

 ஆம்புலன்ஸுக்கு பணம்

ஆம்புலன்ஸுக்கு பணம்

மத்திய பிரதேச மாநிலம் சிங்ரவுலி மாவட்டம் பைலாரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (48). கூலித் தொழிலாளியான இவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், ரமேஷ் குமாருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து பதறிப்போன அவரது மனைவி, உடனே அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார். அதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரூ.200 பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்களிடம் அந்த பணம் இல்லை.

தள்ளுவண்டியில்..

தள்ளுவண்டியில்..

பணம் இல்லை எனக் கூறியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வர மறுத்தவிட்டார். இதனால் அவரது மனைவிக்கு என்ன செய்வதென தெரியவில்லை. இந்நிலையில், தனது வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு தள்ளுவண்டியை கொண்டு வந்து, அதில் தனது கணவரை படுக்கச் செய்தார். பின்னர் அவரும், அவரது 7 வயது மகனும் அந்த தள்ளுவண்டியை சுமார் 5 கி.மீ. தூரம் தள்ளிச் சென்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு உத்தரவு

இந்த காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் பூதாகரமானது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+