நாகாலாந்துக்கு இறைச்சிக்காக கடத்தப்பட்ட 75 'அஸ்ஸாம்' தெருநாய்கள்- 4 பேர் கைது
நாகாலாந்துக்கு இறைச்சிக்காக 75 அஸ்ஸாம் நாய்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாய்களை கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவஹாத்தி: இறைச்சிக்காக அஸ்ஸாமில் இருந்து நாகாலாந்துக்கு 75 தெருநாய்களை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்துவாசிகள் பாம்பு, தவளை, எலி, பூச்சிகள் என அனைத்தையும் சாப்பிடுகிறவர்கள். நாகாலாந்து தலைநகர் கோஹிமா சந்தையில் இவற்றையெல்லாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
கோஹிமாவில் இருக்கும் நாய்க்கறி சந்தை திகிலூட்டக் கூடியதாக இருக்கும். நாய்களை கொடூரமாக அடித்தே கொலை செய்து கூறு போட்டு விற்பனை செய்யும் காட்சிகளை நேரில் பார்த்தால் பிரமை பிடித்து போகும்.

நாய் கறிதான்...
நாகாலாந்துவாசிகள் வசிக்கும் இடங்களில் நாய்களை பார்த்துவிட்டாலே போதும்... அது கூறு போடப்பட்டு விடும். நமது வீடுகளில் ஆடு கோழி அடிப்பது போலதான் நாய்களைக் கருதுகிறார்கள்.

நாய் கடத்தல்
இந்த நிலையில் அஸ்ஸாமில் இருந்து நாகாலாந்துக்கு வேன் ஒன்றில் நாய்கள் கடத்தப்படுவதாக அமாநில போலீசாருக்கு புகார் போனது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் பிளாஸ்திரி போட்டு அடைக்கப்பட்டிருந்த 75 நாய்களுடன் ஒரு வாகனம் சிக்கியது.

25 நாய்கள் மரணம்
இது தொடர்பான விசாரணையில் நாகாலாந்துக்கு இறைச்சிக்காக தெருநாய்களை பிடித்து செல்வதாக வேன் ஓட்டுநர் கூறியுள்ளார். வேனில் அடைக்கப்பட்டதில் மூச்சு திணறி 25 நாய்கள் இறந்து போயிருந்தன.

4 பேர் கைது
உயிருடன் இருந்த நாய்கள் மீட்கப்பட்டன. நாய்களைக் கடத்தியதாக நாகாலாந்தைச் சேர்ந்த 4 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications