மேற்கு வங்க 7ஆம் கட்ட தேர்தல்.. 75.06 சதவீத வாக்குகள் பதிவு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற 7-ம் கட்ட சட்டசபை தேர்தலில் மொத்தம் 75.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், இன்று அங்கு 34 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 280க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தற்போது எம்எல்ஏவாக உள்ள பவானிபூர் தொகுதியிலும் இன்றுதான் தேர்தல் நடைபெற்றது. ஆனால், இந்த முறை மம்தா பவானிபூரில் போட்டியிடவில்லை. அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த முறை பாவனிபூர் தொகுதியில் திரிணாமுல் மூத்த தலைவரும் அமைச்சருமான சோவந்தேப் சட்டோபாத்யாய் போட்டியிடுகிறார். ஏற்கனவே கூச் பிகாரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக இன்று மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. உள்ளூர் போலீசாருடன் சேர்ந்த சுமார் 796 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இன்றைய வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 75.06 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.












Click it and Unblock the Notifications