குஜராத் பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் பலி
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு நகரங்களில் ஏராளமான பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ரஸ்தம்புரா கிராமத்தில் உள்ள பட்டாசுக் கடையில் வெள்ளிக்கிழமை மாலை விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இதனால் கடைகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தன. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக குஜராத்தில் நாதியாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் 2 மணி நேரமாக போராடி தீணை அணைத்தனர்.












Click it and Unblock the Notifications