ஹைதராபாத், கரீம் நகரில் தீவிரவாத இயக்கங்களின் 90 சிலீப்பர் செல்கள்... 'திடுக்' தகவல்கள்
ஹைதராபாத்: தீவிரவாத இயக்கங்களின் 90 சிலீப்பர் செல்கள் ஹைதராபாத் மற்றும் கரீம்நகரில் இயங்கி வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.
தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் பல முறை தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. லும்பினி பார்க், கோகுக் சாட் மற்றும் தில்சுக்நகர் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய தாக்குதல்களை நடத்துவதே ஹைதராபாத், கரீம்நகரில் பதுங்கியிருக்கும் தீவிரவாத இயக்கங்களின் சிலீப்பர் செல்கள்தான் என்கிறது உளவுத்துறை.
ஹூஜி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத இயக்கங்கள்தான் பல தாக்குதல்களை நடத்தி உள்ளன. இந்த இயக்கங்கள் தாக்குதல்களை கண்காணிப்பதற்காக வெளியிடங்களிலிருந்து முன்னரே அனுப்பி உள்ளூர் சிலீப்பர் செல்களை தொடர்பு கொள்ள வைக்கின்றனர். அவர்கள் மூலம் மிகவும் பாதுகாப்பான இடம் ஒன்றில் பதுங்கியிருந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
தெலுங்கானாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிலீப்பர் செல்கள் குறித்தும் உளவுத்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications