பொங்கல் பண்டிகையை ஒட்டி இலங்கை சிறையில் உள்ள 96 மீனவர்களை விடுதலை செய்ய ஆலோசனை
டெல்லி: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 96 பேரை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க வந்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா - இலங்கை இடையிலான வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் கொழும்புவில் நடைபெறுகிறது.

அதற்கு முன்னதாக, இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலர்களின் கூட்டம் அடுத்த வாரம் கொழும்புவில் நடைபெறுகிறது. இதையொட்டி, வரும் 10- ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் கொழும்பு செல்ல உள்ளார். அப்போது, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்து அந்த சந்திப்பின்போது வலியுறத்த உள்ளார். அவர் கொழும்பு பயணத்தை முடித்து இந்தியா திரும்பியவுடன் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் அடுத்த மாதம், இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கை குழுவைக் கூட்டி இருதரப்பு மீனவர் விவகாரங்களை விவாதிக்க இரு நாட்டு அரசுகளும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக இரு நாட்டு அரசுகளும் பரஸ்பரம் மீனவர்களை பொங்கல் பண்டிகையையொட்டி விடுதலை செய்யும் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications