99 % பாகிஸ்தானியர்கள் நல்லவர்கள் தான்... : மார்கண்டேய கட்ஜு
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள 99 சதவீத மக்கள் நல்லவர்கள்தான். ஒரு சிலரே சமூகத்தால் மாற்றப்பட்டு தீய வழிகளில் செல்கின்றனர் என உச்ச நீதிமன்றத்தின் மாஜி நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜாகி உர் ரெஹ்மான் லக்விக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘ பாகிஸ்தானில் உள்ள 99 சதவீத மக்கள் நல்லவர்கள்தான். ஒரு சிலரே சமூகத்தால் மாற்றப்பட்டு தீய வழிகளில் செல்கின்றனர்' என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘எனது இந்த கருத்துக்கு உங்களில் பலரும் எனக்கு எதிரான கருத்துக்களை சொல்வீர்கள்' எனவும் அவர் அதில் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications