6 குழந்தைகளை கருணைக் கொலை செய்ய ஜனாதிபதி அனுமதியை கோரும் தந்தை
ஆக்ரா: அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது 6 குழந்தைகளை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி ஆக்ராவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் நசிர்(42). ஸ்வீட் கடை வைத்துள்ளார். அவரது மனைவி தபசும். அவர்களுக்கு 8 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகனும், இளைய மகளையும் தவிர மற்ற 6 குழந்தைகள் கனாவன் என்ற அரிய வகை நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாவதுடன் காலப்போக்கில் அவர்களால் நடக்க முடியாமல் முடங்கிவிடுவார்கள்.

இந்நிலையில் இது குறித்து நசிர் கூறுகையில்,
என் 6 குழந்தைகளுக்கு வைத்தியம் பார்த்து பார்த்து அலுத்துவிட்டேன். நான் ஒரு சாதாரண ஸ்வீட் கடை உரிமையாளர். என்னால் இவ்வளவு தான் செய்ய முடியும். அதனால் தான் அவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன். இல்லை என்றால் என் குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன் என்றார்.
ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
முதல்வர் அலுவலக அதிகாரிகள் நசிர் குடும்பத்தை நேரில் சந்தித்துள்ளனர். அவர்களின் ஆதார் மற்றும் பிபிஎல் கார்டுகளை வாங்கியுள்ளனர். விரைவில் அவர்களுக்கு உரிய உதவி செய்யப்படும் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications