6 குழந்தைகளை கருணைக் கொலை செய்ய ஜனாதிபதி அனுமதியை கோரும் தந்தை
ஆக்ரா: அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது 6 குழந்தைகளை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி ஆக்ராவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் நசிர்(42). ஸ்வீட் கடை வைத்துள்ளார். அவரது மனைவி தபசும். அவர்களுக்கு 8 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகனும், இளைய மகளையும் தவிர மற்ற 6 குழந்தைகள் கனாவன் என்ற அரிய வகை நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாவதுடன் காலப்போக்கில் அவர்களால் நடக்க முடியாமல் முடங்கிவிடுவார்கள்.

இந்நிலையில் இது குறித்து நசிர் கூறுகையில்,
என் 6 குழந்தைகளுக்கு வைத்தியம் பார்த்து பார்த்து அலுத்துவிட்டேன். நான் ஒரு சாதாரண ஸ்வீட் கடை உரிமையாளர். என்னால் இவ்வளவு தான் செய்ய முடியும். அதனால் தான் அவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன். இல்லை என்றால் என் குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன் என்றார்.
ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
முதல்வர் அலுவலக அதிகாரிகள் நசிர் குடும்பத்தை நேரில் சந்தித்துள்ளனர். அவர்களின் ஆதார் மற்றும் பிபிஎல் கார்டுகளை வாங்கியுள்ளனர். விரைவில் அவர்களுக்கு உரிய உதவி செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications