குடியரசு தலைவர் மாளிகையில் திடீர் தீ விபத்து-உடனடியாக அணைக்கப்பட்டதால் சேதம் தவிர்ப்பு
குடியரசுத் தலைவர் மாளிகையின் கணக்குப் பிரிவில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கணக்குப்பிரிவு அலுவலகத்தில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ மாளிகையான ராஷ்டிரப்பதி பவனில் இன்று காலை 8.45 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து 6 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து கணக்குப்பிரிவு அலவலக அறையில் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த அறையில் இருந்த இன்வெர்ட்டர், நாற்காலி மற்றும் மேசை சேதமடைந்தது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி ராஜ்பாத்தில் உள்ள ராஷ்டிரப்பதி பவன் பிரிட்ஷ் ஆட்சியின் போது கடந்த 1929ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் லோக்சபா சேனல் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications