கருத்துக் கணிப்புகளைத் தடை செய்யலாம் - அட்டர்னி ஜெனரல்
டெல்லி: தேர்தல் கருத்துக் கணிப்புகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கூலம் வாஹன்வதி பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை முழுவதுமாக தடை செய்யலாம் என்று வாஹன்வதி, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளாராம்.
ஏற்கனவே கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளதால், மத்திய அரசு உடனடியாக இதுதொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் கலந்து பேசி முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது.

அதேசமயம், இதுதொடர்பானஇறுதி முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் கருத்துக் கணிப்புத் தடை கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணையத் தகவல்களும் தெரிவிப்பதால், கருத்துக் கணிப்புகளுக்கு விரைவிலேயே தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்புதான் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாகவே கருத்துக் கணிப்புகள் புற்றீசல் போல கிளம்பி வருவது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications