Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓயாமல் சாட்டிங்.. கண்டித்த மனைவி.. தோழியுடன் சேர்ந்து தற்கொலை செய்த கணவர்!

தெலுங்கானாவில் ஓயாமல் சாட்டிங் செய்த கணவரை மனைவி கண்டித்ததால் கணவர் தோழியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

செகந்திராபாத்: தெலுங்கானாவில் ஓயாமல் சாட்டிங் செய்த கணவரை மனைவி கண்டித்ததால் கணவர் தோழியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரில் கிழக்கு மரெட்பள்ளி பகுதியில் வசித்து வந்தவர் சிவ குமார். 27 வயதான இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார்.
இவருடன் சிறுவயது முதலே தோழியாக பழகி வருபவர் 19 வயதான வெண்ணிலா. இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 15ந்தேதி சிவகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் ஆன நாள் முதலே தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தம்பதிகள் எலியும் பூனையுமாக சண்டைபோட்டு வெறுப்பை கக்கி வந்துள்ளனர்.

[ சிவகங்கையில் நீதிபதி இருக்கையில் முனியசாமி.. அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு! ]

விடிய விடிய சாட்டிங்

விடிய விடிய சாட்டிங்

இந்த நிலையில் ஆன்லைன் வழியே மெசேஜ் ஆப் ஒன்றில் சிவகுமார் தொடர்ந்து சாட்டிங் செய்து வந்துள்ளார். இது புது மனைவிக்கு தெரியவரவே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் சிவ குமார் மற்றும் வெண்ணிலா இருவரும் இரவு பகல் என பாராமல் விடிய விடிய சாட்டிங் செய்து வந்துள்ளனர்.

மின்விசிறியில் தூக்கு

மின்விசிறியில் தூக்கு

தனது கணவர் பெண் ஒருவரிடம் எப்பொழுதும் சாட்டிங் செய்து வருகிறார் என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மனைவி. இதனால் வருத்தம் அடைந்த சிவ குமார் கடந்த சனிக்கிழமை வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தோழி தற்கொலை

தோழி தற்கொலை

இதனையறிந்த சிவகுமாரின் தோழி வெண்ணிலா மனவேதனை அடைந்துள்ளார். நண்பர் இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத வெண்ணிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த வெண்ணிலாவின் பக்கத்துவீட்டு தோழி அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி வெண்ணிலா நேற்று உயிரிழந்தார்.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

இதுபற்றி போலீசார் 2 தனி வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாட்டிங் செய்ய மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் புது மாப்பிள்ளையும் அவரது தோழியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+