Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகங்கையில் நீதிபதி இருக்கையில் முனியசாமி.. அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கையில் நீதிபதி இருக்கையில் முனியசாமி என்பவர் அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு ஆயத்தம் செய்யப்பட்டு வந்தது. அப்போது நீதிபதி இருக்கையில் ஒருவர் அரிவாளுடன் அமர்ந்தார்.

A man arrested for sitting in Sivagangai Judges seat with scythe

இதை கண்ட வழக்கறிஞர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர். இதில் அவர் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த முனியசாமி என்பது தெரியவந்தது.

["கோர்ட்டே சொல்லிருச்சு கள்ளக்காதல் தப்பில்லையாம்".. அதிர்ந்த மனைவி.. தூக்கில் தொங்கினார்!]

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அரிவாளுடன் இருக்கையில் அமர்ந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முனியசாமி கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமீன் பெற்றார். மேலும் தொடர்ந்து சில வழக்குகளில் தொடர்புடைய அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதன்பேரில் இவரை ஆஜர்படுத்திய நிலையில் வாராவாரம் குற்றவியல் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் அவர் கையெழுத்திட இன்று வந்தபோது வழக்காடும் இடத்தில் யாரும் இல்லாததால் அங்கிருந்த கோயிலில் இருந்து அரிவாளை எடுத்து வந்து நீதிபதி இருக்கையில் அமர்ந்தது தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+