Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடக்கொடுமையே!.. இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் போட்ட நாடகம்.. புதுமனைவிக்கு நேர்ந்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட: திருமணமாகிய 4 மாதத்தில் இன்சூரன்ஸ் பணம் ரூ. 30 லட்சத்துக்காக மனைவியைக் கொன்று சாலை விபத்தில் உயிரிழந்தது போல கணவர் நாடகம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜார்க்கண்ட் காவல் துறையினர் அவரைக் கைது சிறையில் அடைத்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், ஹஜாரிபாக் பதாமா அருகே முகேஷ்குமார் மேத்தா (30), செவந்திகுமாரி (23) தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், செவந்திகுமாரிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. முகேஷ்குமார் செவந்திகுமாரியை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

jharkhand crime money

இன்சூரன்ஸ் பணம்

அப்போது, செவந்திகுமாரி உயிரிழந்தால் 30 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு பணம் வரும் என்பதற்காக திடீரென முகேஷ்குமார் அவரை ஹெல்மாட்டால் தலையில் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றுள்ளார். புது மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, அதனை சாலை விபத்து போல மாற்றி நாடகம் போட்டுள்ளார். தன் மீது சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக அவருக்கும் சிறு சிறு காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சாலை விபத்தில் செவந்திகுமாரி உயிரிழந்ததாக அனைவரும் நினைத்த நிலையில், முகேஷ்குமாரின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர் புதுமனைவியை கொலை செய்த தகவல் வெளியாகியுள்ளது.

மயங்கி கிடந்த தம்பதி

இதுகுறித்து, காவல் நிலைய அதிகாரி சஞ்சித்குமார் துபே கூறியதாவது: கணவன், மனைவி இருவர் சாலை விபத்தில் சிக்கி பதாமா - இட்கோரி தேசிய நெடுஞ்சாலையில் காயங்களுடன் மயங்கி கிடப்பதாக திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின்பேரில் உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

காயமடைந்திருந்த முகேஷ்குமார் மேத்தா (30) மற்றும் அவரது மனைவி செவந்தி குமாரி (23) ஆகியோரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, செவந்தி குமாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். காயங்களுடன் இருந்த முகேஷ் குமாருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.

இறுதிச்சடங்கு

இதைத்தொடர்ந்து செவந்தகுமாரியின் இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது. அப்போது, அவரது கணவர் முகேஷ் குமாரின் செயல்பாடுகள் உறவினர்களிடையேயும், அப்பகுதி மக்களிடையேயும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், முகேஷ் குமாரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், முகேஷ்குமார், செவந்திகுமாரி உயிரிழந்துவிட்டால் விபத்துக் காப்பீடு தொகை ரூ. 30 லட்சம் கிடைக்கும் என்பதற்காக திட்டமிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. செவந்திகுமாரிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரை சிகிச்சைக்காக இரு சக்கர வாகனத்தில் முகேஷ்குமார் அழைத்துச் சென்றதும், அந்த சந்தர்ப்பை பயன்படுத்தி மனைவியை ஹெல்மட்டால் தலையில் சரமாரியாக அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து தெரியவந்துள்ளது.

நாடகம் போட்ட கணவர்

தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக முகேஷ்குமார் தனக்குத் தானே சிறு காயங்களை உடலில் ஆங்காங்கே ஏற்படுத்திக் கொண்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் முகேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணமான 4 மாதங்களில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது மனைவியை கணவரே அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகம் போட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+