For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டயருக்கு அடியில் சிக்கிய மனிதர்.. 70 கிமீக்கு இழுத்து சென்ற ஓட்டுநர்.. பெங்களூர் பேருந்தில் கொடூரம்

குன்னூரில் இருந்து பெங்களூர் சென்ற பேருந்தில் ஒருவர் டயருக்கு அடியில் சிக்கி மரணம் அடைந்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டயருக்கு அடியில் சிக்கிய மனிதரை 70 கி.மீ இழுத்துச்சென்ற ஓட்டுநர்- வீடியோ

    பெங்களூர்: குன்னூரில் இருந்து பெங்களூர் சென்ற பேருந்தில் ஒருவர் டயருக்கு அடியில் சிக்கி மரணம் அடைந்து இருக்கிறார். இது கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான பேருந்தாகும்.

    இவர் மொத்தம் 70கிமீக்கு இழுத்து செல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடனத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை விளக்கிய ஓட்டுநர் அதிர்ச்சி அளிக்கும் தகவலை கொடுத்துள்ளார்.

    குன்னூரில் இருந்து பெங்களூர் வரை

    குன்னூரில் இருந்து பெங்களூர் வரை

    கர்நாடக அரசின் வோல்வோ வகை பேருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு, உதகை மாவட்டம் குன்னூரிலிருந்து பெங்களூர் கிளம்பி உள்ளது. மைசூர் சாலை வழியாக அந்த பஸ் பெங்களூர் பயணித்தது. மொஹினுதீன் என்ற ஓட்டுநர் இதை இயக்கி இருக்கிறார்.

    சிறிய விபத்து

    சிறிய விபத்து

    இந்த பேருந்து பெங்களூருக்கு வெளியே 70 கிமீ இருக்கும் போது சிறிய கல் போன்ற எதோ ஒன்றில் மீது மோதியுள்ளது. ஓட்டுனருக்கு சிறிய சத்தம் மட்டும் கேட்டு இருக்கிறது. ஆனால் அவர் கண்ணாடியில் எதுவும் தெரியவில்லை என்றதும் எப்போது போல கிளம்பி பெங்களூர் சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் காலை நிறுத்தி இருக்கிறார்.

    அடியில் உடல்

    அடியில் உடல்

    பின் பேருந்து சர்விஸுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பேருந்திற்கு அடியில் ஒருவர் மாட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின் 70 கிமீ முன்பு பேருந்தில் கேட்ட சத்தம் இவர் சிக்கிய சத்தம்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டயருக்கும், அடியில் பொருட்கள் வைக்கும் இடத்திற்கும் இடையில் அவர் மாட்டி இருக்கிறார்.

    ஓட்டுநர் கைது

    ஓட்டுநர் கைது

    இறந்தது யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று இன்னும் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    A man dies after a bus drags him for 70km in Bengaluru. No one knows how this bizarre incident has happened. Driver Mohinuddin arrested by the police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X