தோஷம் இருக்கு.. "வச்சுக்குவோம்".. இல்லன்னா அப்பா செத்துடுவாரு: 4 ஆண்டுகள் மிரட்டியே சீரழித்த மாமா!
மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி மருமகளை 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி: மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி மருமகளை 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு வழிகளிலும் அரங்கேறி வருகிறது. இப்படிதான் என்றில்லாமல் கிடைக்கும் அனைத்து காரணங்களையும் வைத்து பெண்கள் வேட்டையாடப்படுகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக தனது உறவினர் ஒருவரால் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

மாங்கல்ய தோஷம்
டெல்லியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை அவரது தந்தை வழி மாமா மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். தோஷத்தை சரி செய்யாவிட்டால் அவரது தந்தை இறந்துவிடுவார் என்று கூறி மிரட்டி உள்ளார்.

இழுத்த இழுப்பிற்கெல்லாம்
இதனால் பயந்துபோன அந்த பெண் தன் தந்தை நன்றாக இருந்தால் சரி என அவரது மாமா இழுத்த இழுப்பிற்கெல்லம் சென்றுள்ளார். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவரது மாமா நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண்ணை சீரழித்து வந்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும்
இந்த கொடுமை 4 வருடங்களாக நடந்து உள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகும் அவரது மாமா தோஷத்தை கழிக்க வேண்டும் என கூறி செக்ஸ்க்கு அழைத்துள்ளார்.

போலீஸில் புகார்
இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் உடனடியாக இந்த விஷயத்தை தனது கணவரின் தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாமனார் மருமகளுடன் சென்று அந்த உறவினர் மீது போலீஸில் புகார் அளித்தார்.

மாமா கைது
போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடந்த செப்டம்பர் 13 அன்று ஒரு புகார் பதிவு செய்தார். அன்றே குற்றம் சாட்டப்பட்ட தந்தை வழி மாமாவை போலீசார் கைது செய்தனர். 23 வயது இளம்பெண்ணை மாமாவே மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications