தோஷம் இருக்கு.. "வச்சுக்குவோம்".. இல்லன்னா அப்பா செத்துடுவாரு: 4 ஆண்டுகள் மிரட்டியே சீரழித்த மாமா!
மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி மருமகளை 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி: மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி மருமகளை 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு வழிகளிலும் அரங்கேறி வருகிறது. இப்படிதான் என்றில்லாமல் கிடைக்கும் அனைத்து காரணங்களையும் வைத்து பெண்கள் வேட்டையாடப்படுகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக தனது உறவினர் ஒருவரால் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
மாங்கல்ய தோஷம்
டெல்லியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை அவரது தந்தை வழி மாமா மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். தோஷத்தை சரி செய்யாவிட்டால் அவரது தந்தை இறந்துவிடுவார் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இழுத்த இழுப்பிற்கெல்லாம்
இதனால் பயந்துபோன அந்த பெண் தன் தந்தை நன்றாக இருந்தால் சரி என அவரது மாமா இழுத்த இழுப்பிற்கெல்லம் சென்றுள்ளார். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவரது மாமா நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண்ணை சீரழித்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகும்
இந்த கொடுமை 4 வருடங்களாக நடந்து உள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகும் அவரது மாமா தோஷத்தை கழிக்க வேண்டும் என கூறி செக்ஸ்க்கு அழைத்துள்ளார்.
போலீஸில் புகார்
இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் உடனடியாக இந்த விஷயத்தை தனது கணவரின் தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாமனார் மருமகளுடன் சென்று அந்த உறவினர் மீது போலீஸில் புகார் அளித்தார்.
மாமா கைது
போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடந்த செப்டம்பர் 13 அன்று ஒரு புகார் பதிவு செய்தார். அன்றே குற்றம் சாட்டப்பட்ட தந்தை வழி மாமாவை போலீசார் கைது செய்தனர். 23 வயது இளம்பெண்ணை மாமாவே மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.