ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம்.. லடாக் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. லேசான அளவில் நிலநடுக்கம் பதிவானதால் பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
பூமிக்கு அடியில் டெக்டானிக் தட்டுகள் எனப்படும் நிலத்தகடுகள் இருக்கின்றன. இது அவ்வப்போது நகர்வதுண்டு. இப்படி நகரும்போது அது பூமிக்கு மேல்புறத்தில் நில அதிர்வுகளாக வெடிக்கும். அப்படித்தான் இன்று காலையும் பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது. பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ரிக்டர் அளவில் இது 3.4ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 5.39 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. லேசாக இருந்ததால் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications