அதிகாலையில் அதிர்ந்த பஞ்சாப்.. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள்.. ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஏற்கெனவே நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்ட நிலையில் இந்த நிலநடுக்கம் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
பஞ்சாபின் ரூப்நகரில் இன்று அதிகாலை 01:13 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் 10 கி.மீ ஆழத்தில் பூமி தகடுகள் நகர்ந்ததால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இது பெரிய அளவில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இரு தினங்களுக்கு முன்னர் நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் உணரப்பட்டது. எனவே இதனை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் புதிய பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications