ஒடிசாவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கு - 5 பேருக்கு தூக்கு!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசாவில் சிறுமி ஒருவரைக் கடத்தி பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள பெக்லுன்டி என்ற கிராமத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றனர். சில நாட்களுக்கு பின்னர் அந்த சிறுமி உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

A Minor Girl Gangraped and murder, five accused get death sentence

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் கியோன்ஜர் மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+