பணியிடத்தில் பாலூட்டி..கடமையையும் தாய்மையையும் வெளிப்படுத்திய பெண் காவலர்.. குவியும் பாராட்டு!
காந்தி நகர்: பணியிடத்தில் பாலூட்டி, தாலாட்டி கடமையையும் தாய்மையையும் ஒரு சேர வெளிப்படுத்திய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் நேராக அகமதாபாத்திற்கு வந்து அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார். பின்னர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை மனைவி மெலானியாவுடன் சுற்றி பார்க்கிறார்.
இந்த பயணத்தின் போது டிரம்புடன் மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜெரெட் குஷ்னர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர்.

காந்தி
ஆக்ராவிலிருந்து இவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு 25-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்கள். பின்னர் அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காந்தியின் சமாதியான ராஜ்காட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
|
டிரம்ப்
இரு தினங்களுக்கு இந்தியாவுக்கு வருகை தரும் டிரம்ப் இங்கு 36 மணி நேரம் மட்டுமே தங்குகிறார். இதையொட்டி குஜராத் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அகமதாபாத்தில் வைசாட் பகுதியில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடமை
அப்போது சங்கீதா பார்மர் என்ற பெண் காவலர் தனது 1 வயது குழந்தையை தாலாட்டி பாலூட்டி கொண்டிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் பணியின் போது ஒரு வயது குழந்தையை பார்த்து கொள்வது என்பது சற்று சிரமம்தான். ஆனால் தாயாகவும் காவலராகவும் எனக்கு இருக்கும் கடமைகளை செய்ய வேண்டியது என்னுடைய பொறுப்பு.

தாலாட்டி
என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இன்று என்னுடனே வைத்துக் கொண்டேன். அவனுக்கு பணியின் போது இடை இடையே பாலூட்டினேன் என்றார். பணியிடத்தில் பாலூட்டி, தாலாட்டி கடமையையும் தாய்மையையும் ஒரு சேர வெளிப்படுத்திய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications