Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி டிஜிபி பெயரில் டிவிட்டர் கணக்கு தொடங்கி போலீசை ஆட்டிப்படைத்த பள்ளி மாணவன்.. அதிர்ச்சி காரணம்

உத்தர பிரதேச மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் பெயரில், டிவிட்டரில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் கணக்கு ஆரம்பித்து, போலீசுக்கு நிறைய கட்டளைகள் இட்டு இருக்கிறான்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டிவிட்டர் கணக்கு தொடங்கி போலீசை ஆட்டிப்படைத்த பள்ளி மாணவன்

    லக்னோ: உத்தர பிரதேச மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் பெயரில், டிவிட்டரில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் கணக்கு ஆரம்பித்து, போலீசுக்கு நிறைய கட்டளைகள் இட்டு இருக்கிறான்.

    போலீஸ் எல்லோரும் எந்த விஷயத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக இந்த செயலை அவன் செய்தான் என்று கூறப்படுகிறது. இவனது கட்டளைகளை போலீஸ் சில நாட்கள் கேட்டு, அதை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சந்தேகத்தின் பேரில், இந்த கணக்கை ஆராய்ந்த சைபர் போலீஸ், இது பொய்யான கணக்கு என்று கண்டுபிடித்தது. பின் விசாரணையில் அந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஏன் இப்படி செய்தான் என்பது தெரியவந்துள்ளது.

    நடவடிக்கை இல்லை

    நடவடிக்கை இல்லை

    இந்த பத்தாம் வகுப்பு மாணவனின் பெயர் வெளியிடப்படவில்லை. இவன் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான 40000 ரூபாய் பணம் இரண்டு மாதம் முன்பு காணாமல் போய் இருக்கிறது. இதையடுத்து இந்த சிறுவனும், அவனின் குடும்ப உறுப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீஸ் இதில் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது.

    பொய்யான கணக்கு

    பொய்யான கணக்கு

    இதனால் கோபமடைந்த அந்த சிறுவன், உத்தர பிரதேச மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் பெயரில், டிவிட்டரில் பொய்யான கணக்கு ஒன்று உருவாக்கி இருக்கிறான். ஏற்கனவே டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் பெயரில், டிவிட்டரில் வேறு ஒரு உண்மையான கணக்கு இயங்கி வந்தது. இவன் அந்த பொய்யான கணக்கு மூலம், இந்த ரூ.40000 காணாமல் போன புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி லோக்கல் போலீசின் டிவிட்டர் கணக்கிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளான்.

    பணம் கிடைத்தது

    பணம் கிடைத்தது

    இதை பார்த்த லோக்கல் போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. பணமும் கண்டுபிடிக்கப்பட்டு, அவனின் குடும்ப உறுப்பினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களுக்கு பின் இரண்டு கணக்கு இருப்பதை கண்டுபிடித்த, சைபர் கிரைம் போலீஸ், பின் சோதனை செய்து இவனை பிடித்தது.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    ஆனால் டிஜிபி ஓம் பிரகாஷ் சிங், அந்த சிறுவனை கைது செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த சிறுவன் பள்ளி படிப்பதால், கைது செய்தால் தவறாக செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றுள்ளார். இந்த நிலையில் போலீஸ் அவனை கடுமையாக கண்டித்து அனுப்பி இருக்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+