வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை போட்டோ எடுத்த 10ஆம் வகுப்பு மாணவர் போலீஸாரால் தாக்கப்பட்ட கொடூரம்!
வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை போட்டோ எடுத்த 10ஆம் வகுப்பு மாணவர் போலீஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெகபூநகர்: தெலுங்கானாவில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை போட்டோ எடுத்து கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பிய மாணவர் போலீஸாரால் பள்ளி வளாகத்துக்குள்ளேயே தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெகபூநகரில் இயங்கி வரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கியுள்ளார். இதனைக் கண்ட மாணவர் ஒருவர் தனது மொபைல் போனில் போட்டோ எடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த 2 போலீசார் அந்த மாணவனை பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர்.

பள்ளி வளாகத்துக்குள்..
ஆசிரியர்களின் கண் முன்னே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மாணவன் பள்ளிக்கூட வளாகத்திற்குள்ளேயே குடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடல் முழுவதும் காயம்
ஆனால் இதனை மறுத்துள்ள மாணவர் கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்ததாக தெரிவித்துள்ளார். போலீசார் அடித்ததில் அந்த மாணவனின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள்
தான் போலீசாரால் பள்ளி வளாகத்துக்குள் தாக்கப்படுவதை ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தன்னுடன் அமர்ந்து கூல்ட்ரிங்ஸ் குடித்த மற்ற சக மாணவர்கள் போலீஸிடம் இருந்து தப்பி விட்டதகாவும் அவர் கூறினார்.

சக ஆசிரியர்களின் ஏற்பாடு
வகுப்பறையில் ஆசிரியர் தூங்கியதை போட்டோ எடுத்து உயர் அதிகாரிக்கு அனுப்பியதாலேயே சக ஆசிரியர்கள் மாணவரை தாக்க போலீசாரை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications