வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை போட்டோ எடுத்த 10ஆம் வகுப்பு மாணவர் போலீஸாரால் தாக்கப்பட்ட கொடூரம்!
வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை போட்டோ எடுத்த 10ஆம் வகுப்பு மாணவர் போலீஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெகபூநகர்: தெலுங்கானாவில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை போட்டோ எடுத்து கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பிய மாணவர் போலீஸாரால் பள்ளி வளாகத்துக்குள்ளேயே தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெகபூநகரில் இயங்கி வரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கியுள்ளார். இதனைக் கண்ட மாணவர் ஒருவர் தனது மொபைல் போனில் போட்டோ எடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த 2 போலீசார் அந்த மாணவனை பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர்.

பள்ளி வளாகத்துக்குள்..
ஆசிரியர்களின் கண் முன்னே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மாணவன் பள்ளிக்கூட வளாகத்திற்குள்ளேயே குடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடல் முழுவதும் காயம்
ஆனால் இதனை மறுத்துள்ள மாணவர் கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்ததாக தெரிவித்துள்ளார். போலீசார் அடித்ததில் அந்த மாணவனின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள்
தான் போலீசாரால் பள்ளி வளாகத்துக்குள் தாக்கப்படுவதை ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தன்னுடன் அமர்ந்து கூல்ட்ரிங்ஸ் குடித்த மற்ற சக மாணவர்கள் போலீஸிடம் இருந்து தப்பி விட்டதகாவும் அவர் கூறினார்.

சக ஆசிரியர்களின் ஏற்பாடு
வகுப்பறையில் ஆசிரியர் தூங்கியதை போட்டோ எடுத்து உயர் அதிகாரிக்கு அனுப்பியதாலேயே சக ஆசிரியர்கள் மாணவரை தாக்க போலீசாரை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications