சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை; மற்றொருவர் தற்கொலை முயற்சி
Click here to see the BBC interactive
சென்னையில் உள்ள ஐஐடியில் படித்துவந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் ஒரு மாணவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுத் திரும்பியுள்ளார்.
சென்னை ஐஐடியில் எலக்ட்ரிகல் பொறியியலில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்துவரும் ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர்தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அவர் நேற்று, திங்கள்கிழமை மாலையில், தன்னுடைய அறையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அவர் வெகுநேரமாக வெளியில் வராத நிலையில், மாலை ஆறு மணி அளவில் நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- மனச்சோர்வுக்கு உண்மையில் மருந்துகள் தீர்வு அளிக்குமா? - ஆய்வு எழுப்பும் கேள்விகள்
- தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் - உண்மையில் யார் மீது தவறு? - கள நிலவரம்
- மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? சில புரிதல்களும் விளக்கங்களும்
இதையடுத்து கோட்டூர்புரம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அதே விடுதியைச் சேர்ந்த வீரேஷ் என்ற மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பினார்.
படிப்பு தொடர்பான அழுத்தத்தால் இந்தத் தற்கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவங்களையடுத்து ஐஐடி முன்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சென்னை ஐஐடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது













Click it and Unblock the Notifications