பெண்களின் முத்த மழை .. ஆளாளுக்குக் குவிந்ததால் எழுந்து ஓடிய ராகுல்!
ஜோர்ஹாட், அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலத்திற்குப் போயிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பெண்கள் மாறி மாறி திடீரென முத்தமிட்டதால் ராகுல் காந்தி நெளிந்து விட்டார்
இதை அவர் எதிர்பார்க்கவி்ல்லை, அவரால் தடுக்கவும் முடியவில்லை. ஒரு பெண் கன்னத்தில் கொடுக்க, இன்னொருவர் தலையில் முத்தமிட்டார். இதைப் பார்த்து மேலும் பல பெண்கள் எழுந்திருத்து ஓடி வர.. விட்டால் போதும்டா சாமி என்றஉ ராகுல் காந்தியே எழுந்து அங்கிருந்து போய் விட்டார்...

ஜோர்ஹாட் நகருக்கு வந்திருந்த ராகுல் காந்தி அங்கு கிட்டத்தட்ட 600 பெண்கள் அடங்கிய சுய உதவிக் குழுவினரிடையே உரையாற்றினார். அப்போது பெண்கள் பலர் ராகுலுக்கு கை கொடுத்தனர். வணக்கம் வைத்தனர். சிலர் உற்சாகம் மேலிட முத்தத்திற்குள் புகுந்து விட்டனர்.

முன்னதாக அவர்களிடையே ராகுல் பேசுகையில், பெண்களால் இந்த நாட்டின் பிரமதராக முடியும், முதல்வராக முடியும். காரணம் அவர்களுக்கு அந்தத் தகுதி உள்ளது. பெண்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது, சக்தி உள்ளது, பொறுமை உள்ளது, திறமை உள்ளது என்றார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 33 சதவீத இட ஒதுக்கீடு போதாது. மாறாக சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் 50 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றார் ராகுல்.
வட கிழக்கு இந்தியப் பெண்கள் குறித்து கூறுகையில், பிற பெண்களை விட வட கிழக்கு மாநில பெண்கள் திறமையானவர்கள், தைரியமானவர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications