வீறிட்டழுத குழந்தையை மாடிப்படியில் தூக்கி எறிந்த தாய்.. அதிர்ச்சி தரும் வீடியோ
டெல்லியில் தாய் ஒருவர் தனது கைக்குழந்தையை மாடிப்படியில் வீசியெறிந்துள்ளார். பதபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லி: டெல்லியில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் தாய் ஒருவர் தனது கைக்குழந்தையை மாடிப்படியில் வீசியெறிந்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய் ஒருவர் தனது கைகுழந்தையை மேலே இருந்து மாடிப்படியில் வீசியெறியும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பார்ப்பவர்களை பதபதைக்க செய்கிறது.
அந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ கடந்த 11ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் பதிவாகியுள்ளது. அதில் இளம் தாய் ஒருவர் வீட்டின் கட்டிலில் அமர்ந்து ஆண் ஒருவருடன் தகராறு செய்து வருகிறார்.
அப்போது அருகில் தூங்கிக்கொண்டிருந்த கைக்குழந்தை அழ ஆரம்பிக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய் தனது குழந்தையை தூக்கிச் சென்று வீட்டின் கதவருகில் நின்று கொண்டு மாடிப்படியில் வேகமாக வீசியெறிகிறார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடிவரும் குடும்பத்தினர் மாடிப்படியில் இறங்கி குழந்தையை மீட்க ஓடுகின்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
காயமடைந்த குழந்தை உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அந்த இளம்தாய் மீது அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.