ஆதார் ஒரு பிராடு, சட்டவிரோதமானது.. ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்த ஒரே நீதிபதி.. சந்திரசூட்!
ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மட்டும் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார்.
Recommended Video

டெல்லி: ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மட்டும் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார். அதேபோல் ஆதாரை நிதிமசோதாவாக ஏற்க முடியாது என்றும் கூறினார்.
ஆதார் எண் கட்டாயமா என்ற வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகளின் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளித்து உள்ளனர். 5 பேரில் 3 நீதிபதிகள் தீர்ப்பை சிக்ரி வாசித்தார். மற்ற 2 நீதிபதிகள் வேறு தீர்ப்பு தனியாக வழங்கினார்கள்.
இதில் ஆதார் தீர்ப்பில் நான்கு நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இதில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார். அவர் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

முடியாது
அதன்படி, ஆதார் பாதுகாப்பானது என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதார் தனி மனித உரிமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஆதார் மூலம் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது. இது வாக்கு வங்கி அரசியலை நோக்கியும், மக்களை மிரட்டுவதை நோக்கியும் அழைத்து செல்லும்.

பல குழப்பம்
ஆதாரில் நிறைய குழப்பங்கள் உள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற போதுமான பலன்கள் ஆதார் மூலம் கிடையாது. மக்கள் நலத்திட்டங்களை இது தடுக்கிறது. எல்லா வசதியும் இதன் காரணமாக எல்லோருக்கு சென்று சேர்வதில்லை.

திருட்டு இருக்கிறது
ஆதாரில் தகவல் திருட்டு நடக்கிறது. இதை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதார் அமைப்பு இந்த தகவல் திருட்டை பெரிய விஷயமாக கருதுவதில்லை. இதில் தகவல்களை எப்படி எதிர்காலத்தில் மாற்ற வேண்டும் ஆலோசனை வழங்கப்படவில்லை.

நிதி மசோதா முடியாது
ஆதாரை நிதிமசோதாவாக ஏற்க முடியாது. நிதி மசோதாவாக இல்லாத ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நிதி மசோதா என்று கூறி தாக்கல் செய்வது ஏமாற்றுவேலை. ஆதாரை நிதி மசோதாவாக தாக்கல் செய்தது அரசியலமைப்பிற்கு எதிரானது.

ஆனால் என்ன
இறுதியாக நீதிபதி டி.ஒய் சந்திரசூட் ஆதாரை கட்டாயமாக ஏற்க முடியாது என்றார். ஆனால் அதே சமயம் ஆதார் தீர்ப்பில் நான்கு நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். அதேபோல் நான்கு நீதிபதிகளும் ஆதாரை நிதி மசோதாவாக கருத முடியும் என்றும் கூறியுள்ளனர். இதனால் ஆதார் நான்கு நீதிபதிகளின் உத்தரவின் படி அரசு சேவைகளுக்கு கட்டாயமாகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications