ஆதார் ஒரு பிராடு, சட்டவிரோதமானது.. ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்த ஒரே நீதிபதி.. சந்திரசூட்!
ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மட்டும் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார்.
Recommended Video

டெல்லி: ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மட்டும் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார். அதேபோல் ஆதாரை நிதிமசோதாவாக ஏற்க முடியாது என்றும் கூறினார்.
ஆதார் எண் கட்டாயமா என்ற வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகளின் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளித்து உள்ளனர். 5 பேரில் 3 நீதிபதிகள் தீர்ப்பை சிக்ரி வாசித்தார். மற்ற 2 நீதிபதிகள் வேறு தீர்ப்பு தனியாக வழங்கினார்கள்.
இதில் ஆதார் தீர்ப்பில் நான்கு நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இதில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார். அவர் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

முடியாது
அதன்படி, ஆதார் பாதுகாப்பானது என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதார் தனி மனித உரிமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஆதார் மூலம் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது. இது வாக்கு வங்கி அரசியலை நோக்கியும், மக்களை மிரட்டுவதை நோக்கியும் அழைத்து செல்லும்.

பல குழப்பம்
ஆதாரில் நிறைய குழப்பங்கள் உள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற போதுமான பலன்கள் ஆதார் மூலம் கிடையாது. மக்கள் நலத்திட்டங்களை இது தடுக்கிறது. எல்லா வசதியும் இதன் காரணமாக எல்லோருக்கு சென்று சேர்வதில்லை.

திருட்டு இருக்கிறது
ஆதாரில் தகவல் திருட்டு நடக்கிறது. இதை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதார் அமைப்பு இந்த தகவல் திருட்டை பெரிய விஷயமாக கருதுவதில்லை. இதில் தகவல்களை எப்படி எதிர்காலத்தில் மாற்ற வேண்டும் ஆலோசனை வழங்கப்படவில்லை.

நிதி மசோதா முடியாது
ஆதாரை நிதிமசோதாவாக ஏற்க முடியாது. நிதி மசோதாவாக இல்லாத ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நிதி மசோதா என்று கூறி தாக்கல் செய்வது ஏமாற்றுவேலை. ஆதாரை நிதி மசோதாவாக தாக்கல் செய்தது அரசியலமைப்பிற்கு எதிரானது.

ஆனால் என்ன
இறுதியாக நீதிபதி டி.ஒய் சந்திரசூட் ஆதாரை கட்டாயமாக ஏற்க முடியாது என்றார். ஆனால் அதே சமயம் ஆதார் தீர்ப்பில் நான்கு நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். அதேபோல் நான்கு நீதிபதிகளும் ஆதாரை நிதி மசோதாவாக கருத முடியும் என்றும் கூறியுள்ளனர். இதனால் ஆதார் நான்கு நீதிபதிகளின் உத்தரவின் படி அரசு சேவைகளுக்கு கட்டாயமாகிறது.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications