வருகிறது பசுமாடுகளுக்கும் 'ஆதார் அட்டை'.. ரூ148 கோடி ஒதுக்கீடு!
மனிதர்களுக்கு இந்தியாவில் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதைப்போல, பசுமாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பசு மாடுகளின் பாதுகாப்புக் குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மத்திய அரசு,விரைவில் பசுக்களின் பாதுகாப்புக்கென அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பசுவதையைத் தடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி இந்தக் குழு 500 பக்கங்கள் அடங்கிய பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

பசு உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பதில், மாநில அரசுகளுக்கு அதிக பொறுப்புள்ளதாக அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு பசு மாடுகளை இறைச்சிக்காக கடத்தியதாகக் கூறி தலித்துகள் சிலரால் அடித்துக்கொல்லப்பட்டனர். மேலும் சில இடங்களில் இஸ்லாமியர்கள் மீதும் இதே போன்று பசுப் பாதுகாப்பாளர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் பசுக்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கினால், இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்காது என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக் கூறியிருந்தனர். இதைப் பரிசீலித்து தற்போது பசுக்களுக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்கப்படும் என்று நிபுணர்கள் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் சுமார் 9 கோடி பசுமாடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றுக்கு மொத்தம் 148 கோடி ரூபாய் செலவில் அடையாள அட்டை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு அடையாள அட்டை 8 ரூபாய் செலவில் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கப்படும் என்றும் அதில் 12 இலக்க அடையாள எண் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications