ரேஷன் பொருட்கள் வாங்க "ஆதார்" கட்டாயம்.. ஜூன் 30க்குள் வாங்க மத்திய அரசு அறிவுறுத்தல்
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க ஆதார் அட்டை எண் அவசியம் என மத்திய அரசு அறிவி்த்துள்ளது. ஆதார் அட்டை எண் இல்லாதவர்கள் ஜுன் 30-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பண பரிவர்த்தனைகள் உட்பட அனைத்திற்கும் மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கவும் மத்திய அரசு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சலுகைகளை பெற குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ரேசன் பொருட்களை வாங்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் ரேசன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுக்கான மத்திய அரசின் மானியம், சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்படுவது போல வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் சலுகைகளை பெற ஜுன் 30-க்குள் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் அட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications