ஆதார் அட்டையை எதுக்கும் கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

Aadhar Card should not be mandatory: SC tells Centre
டெல்லி: அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என கோரும் அனைத்து உத்தரவுகளையும் வாபஸ் பெறுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஆதார் அட்டையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட 'உதய்' ( Unique Identification Authority of India -UIDAI) நிறுவனம், ஆதார் அட்டை வைத்துள்ள நபர் குறித்த எந்த ஒரு தகவலையும், அந்த அட்டை தாரரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு அரசு ஏஜென்சியுடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆதார் அட்டைக்கு எதிரன வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுஹான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.

ஆதார் அடையாள அட்டை திட்டம் தனி நபர்களின் அந்தரங்க உரிமையை மீறுவதோடு மட்டுமல்லாது, இந்த திட்டத்தின் ஆதாரமாக கருதப்படும் 'பயோமெட்ரிக்ஸ்' தொழில்நுட்பம், சோதித்து பார்க்கப்படாததாகவும், நம்பகத்தன்மையற்றதாகவும் உள்ளது என்றும், போதுமான சரிபார்த்தல் இல்லாமலேயே பொதுமக்கள் பணம் தனியார் நிறுவனத்திற்கு திருப்பிவிடப்படுவதாகவும் நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

மானிய விலை சிலிண்டர் பெற ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என்றும், அந்த அட்டையின் எண்ணை எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் ஏஜென்சியில் பதிந்தால்தான், மானிய தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு, அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, மானிய சிலிண்டருக்கு ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று அறிவித்தது.

இருப்பினும் வேறு சில அரசு சேவைகளுக்கு ஆதார் அட்டை எண் கோரப்படுவதும், ஆதார் அட்டை வாங்கிவிட்டீர்களா என ஊடகங்களில் அரசு மேற்கொள்ளும் பிரசாரமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலேயே, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+