For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஞ்சாபில் மிரட்டிய ஆம் ஆத்மி ! அகாலிதளத்துக்கு இணையான 4 தொகுதிகளில் வெற்றி!!

By Mathi
|

அமிர்தசரஸ்; லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளைக் கைப்பற்றி இதர கட்சிகளை மிரட்டியிருக்கிறது.

லோக்சபா தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் பொதுவாக ஆம் ஆத்மி கட்சியை கண்டு கொள்ளவில்லை. அதே நேரத்தில் பஞ்சாப்பில் சில இடங்களைக் கைப்பற்றும் என்று கூறின.

AAP leads in Punjab

அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 13 தொகுதிகளில் ஆளும் சிரோமணி அகாலிதளம் 4 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதற்கு இணையாக ஆம் ஆத்மி கட்சியும் 4 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் 3 இடத்திலும் பாஜக 2 இடத்திலும் வென்றுள்ளன. ஆளும் சிரோமணி அகாலிதளத்துக்கு இணையான இடங்களை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள அனைத்து கட்சிகளளயும் மிரட்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது ஆம் ஆத்மி.

அதன் கூட்டணிக் கட்சியான பாஜக, காங்கிரஸை மிரட்டும் வகையில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 4, தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் சிரோமணி அகாலிதளம் 4, பாஜக 2, காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

English summary
Aaam Admi party now leads 4 seats in Punjab.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X