2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? சுவாரசிய கருத்துக்கணிப்பு
2019 லோக் சபா தேர்தலில் கிழக்கு இந்திய மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Recommended Video
டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் கிழக்கு இந்திய மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு ஒரு முக்கியமான ஆண்டு, மோடி தலைமையிலான அரசு தேர்தலை சந்திக்கவுள்ளது. தற்போது 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் 2019 தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் மீதான நாட்டு மக்களின் மனநிலை குறித்து ஏபிபி - சிஎஸ்டிஎஸ் நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பு குறித்த தகவல்கள் இதோ..
செல்வாக்கு சரியவில்லை
இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் பாஜக செல்வாக்கு சரியவில்லை என ஏபிபி - சிஎஸ்டிஎஸ் சர்வே தெரிவித்துள்ளது.
பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு
கிழக்கு மாநிலங்களில் 142 எம்.பி தொகுதிகளில் 82 முதல் 96 இடங்களை தேஜகூ கைப்பற்ற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐமுகூ 22 முதல் 26 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ல் எவ்வளவு?
மற்றவர்கள் 26 முதல் 30 இடங்களை கைப்பற்றுவர் என ஏபிபி சர்வே தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் ஐமுகூ 11 சதவீத வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு மமதா கட்சி 73 சதவீத வாக்குகளையும் தேஜகூ 17% வாக்குகளையும், ஐமுகூ 10 சதவீத வாக்குகளையும் பெற்றது.
வாக்கு சதவீதம் உயரும்
மேற்வங்கத்தில் இன்றைய தேதியில் தேர்தல் நடந்தால் மமதா கட்சி 65% வாக்குகளை பெறும். தேஜகூ 24% வாக்குகளை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது தேஜகூ வாக்கு சதவீதம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.