இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது.. ஆர்எஸ்எஸ் மாணவ அமைப்பின் மாணவர் அளித்த பொய்யான ஆவணம்!
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக தேர்வாகி உள்ள ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர் அங்கு பொய்யான சான்றிதழ் அளித்து வெற்றிபெற்றது அம்பலமாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக தேர்வாகி உள்ள ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர் அங்கு பொய்யான சான்றிதழ் அளித்து வெற்றிபெற்றது அம்பலமாகி உள்ளது.
நேற்று முதல்நாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவு வெளியானது. இந்த மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது அங்கு மாணவ தலைவராக இடதுசாரிகளின் கூட்டமைப்பை சேர்ந்த என். சாய் பாலாஜி என்ற மாணவர் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபியை சேர்ந்த மாணவர் டெல்லி பல்கலைகழக மாணவர் சங்க தலைவராக தேர்வாகி உள்ளார். இவர் அங்கு பொய்யான சான்றிதழ் அளித்து வெற்றிபெற்றது அம்பலமாகி உள்ளது.

ஒரு இடம் வெற்றி
ஜேஎன்யூ மாணவ தேர்தலில் முக்கிய இடங்களில் எல்லாமும் ஏபிவிபி அமைப்பு தோல்வி அடைந்திருக்கும் நிலையில், டெல்லி பல்கலையில் மட்டும் அந்த அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அங்கு மாணவ சங்க தலைவராக ஏபிவிபியை சேர்ந்த அங்கீவ் பஸோயா வெற்றி பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்று கூறப்படுகிறது.

பொய்
இந்த நிலையில் இவர் பொய்யான சான்றிதழை கொடுத்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவர் இளங்கலை பட்டம் படிக்கவே இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இவர், திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் படிக்கவே இல்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது.

ஆமாம்
இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் இதை உறுதி செய்துள்ளது. ஆம், இவர் அந்த பல்கலையில் படிக்கவில்லை என்று, பல்கலை நிர்வாகவே உறுதி செய்துள்ளது. அவர் அளித்து இருக்கும் ஆவணங்கள் பொய்யானது என்றும் பதில் அளித்துள்ளது.
|
இட்லின்னு சொன்னா
இந்த நிலையில் ''இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது'' என்ற வசனத்திற்கு ஏற்றபடி, திருவள்ளுவர் என்ற பெயரே இதில் தவறாக எழுதப்பட்டுள்ளது. தமிழில் எழுத முடியாத, தவறான எழுத்துருவில் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி சர்ச்சையில் சிக்கி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications