ஊழல் சர்ச்சையில் சிக்கிய கேஜ்ரிவால் உறவினர் மர்ம மரணம்- டெல்லியில் பெரும் பரபரப்பு
ஊழல் சர்ச்சையில் சிக்கிய டெல்லி கேஜ்ரிவால் உறவினர் மர்ம மரணமடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: சர்ச்சையில் சிக்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உறவினர் பன்சால் திடீர் என மரணமடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஊழலை எதிர்த்து கட்சியை தொடங்கி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியவர் கேஜ்ரிவால். இப்போது சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமந்து கொண்டிருக்கிறார்.
சிபிஐயில் புகார்
அமைச்சரவையில் இருந்த சகாவான கபில் மிஸ்ராவே, சிபிஐ வரைக்கும் கேஜ்ரிவால் மீதான ஊழல் புகாரை கொண்டு சென்றுவிட்டார். மேலும் கேஜ்ரிவாலின் உறவினர் பன்சாலுக்கு சட்டவிரோத நில பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாகவும் மிஸ்ரா குற்றம்சாட்டியிருந்தார்.
பன்சால் திடீர் மரணம்
ஆனால் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதாவோ, ட்விட்டரில் பன்சால் உயிருடன் இல்லை என பதிவிட்டிருந்தார். டெல்லி குர்கானில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல்நலக் குறைவால் காலமானதாக கூறப்படுகிறது.
பன்சால் நிறுவனம் மீது வழக்கு
இந்த நிலையில் டெல்லி அரசின் பொதுப்பணித்துறையில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச தடுப்பு பிரிவு நேற்று வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதில் கேஜ்ரிவாலின் உறவினர் பன்சாலின் நிறுவனமும் அடங்கும்.
சர்ச்சை
தற்போது பன்சால் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மரணம் டெல்லி அரசியலை உலுக்கி வருகிறது.