பெங்களூர் பள்ளியில் சாக்லேட் கொடுத்து 3 வயது சிறுமியை சீரழித்தவர் நீதிமன்ற காவலில்
பெங்களூர்: பெங்களூரில் சாக்லேட் கொடுத்து 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி அட்டென்டர் நாகராஜை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
கிழக்கு பெங்களூரில் உள்ள ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய மெட்ராஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை பள்ளியில் அட்டென்டராக இருந்த நாகராஜ்(27) என்பவர் சாக்லேட் கொடுத்து அக்டோபர் 22 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில் பலாத்காரம் செய்துள்ளார்.

காலையில் பள்ளியில் பிரார்த்தனை முடிந்த பிறகு காலியாக இருந்த வகுப்பறையில் வைத்து நாகராஜ் சிறுமியை சீரழித்துள்ளார்.
நவம்பர் 26ம் தேதியில் இருந்து சிறுமி ஒரு மாதிரியாக இருந்துள்ளார். அதன் பிறகு கடந்த 28ம் தேதி தான் தன்னை நாகராஜ் ஏதோ செய்ததாகவும் தனக்கு வலிப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாகராஜை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
5 மாதங்களில் பெங்களூரில் 5 பள்ளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications