பெங்களூர் பள்ளியில் சாக்லேட் கொடுத்து 3 வயது சிறுமியை சீரழித்தவர் நீதிமன்ற காவலில்
பெங்களூர்: பெங்களூரில் சாக்லேட் கொடுத்து 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி அட்டென்டர் நாகராஜை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
கிழக்கு பெங்களூரில் உள்ள ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய மெட்ராஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை பள்ளியில் அட்டென்டராக இருந்த நாகராஜ்(27) என்பவர் சாக்லேட் கொடுத்து அக்டோபர் 22 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில் பலாத்காரம் செய்துள்ளார்.

காலையில் பள்ளியில் பிரார்த்தனை முடிந்த பிறகு காலியாக இருந்த வகுப்பறையில் வைத்து நாகராஜ் சிறுமியை சீரழித்துள்ளார்.
நவம்பர் 26ம் தேதியில் இருந்து சிறுமி ஒரு மாதிரியாக இருந்துள்ளார். அதன் பிறகு கடந்த 28ம் தேதி தான் தன்னை நாகராஜ் ஏதோ செய்ததாகவும் தனக்கு வலிப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாகராஜை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
5 மாதங்களில் பெங்களூரில் 5 பள்ளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications