இந்த 'பேரழகிகளின்' ஃபேஷன் ஷோவை பார்த்தாலே பாராட்டனும்னு தோனும்!: வீடியோ இதோ
போபால்: மத்திய பிரதேசத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஃபேஷன் ஷோவில் ஆசிட் வீச்சு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ராம்ப் வாக் செய்தனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வித்தியாசமான ஃபேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக ஃபேஷன் ஷோ என்றால் அழகிகள் அழகாக உடையணிந்து ஒய்யாரமாக நடந்து வருவார்கள்.
{ventuno}
போபாலில் நடந்த நிகழ்ச்சியில் அழகிகள் அல்ல பேரழகிகள் ராம்ப் வாக் செய்தனர். ஆசிட் வீச்சு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள டாலி, ரூபா, நீத்து, கீதா மற்றும் ராணி ஆகியோர் தான் ராம்ப் வாக் செய்த அந்த பேரழகிகள்.
ஆசிட் வீச்சால் முகம் அகோரமானாலும் நம்பிக்கையை இழந்துவிடாமல் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழும் அவர்கள் ராம்ப் செய்தது பலரையும் கவர்ந்துள்ளது. ராம்ப் வாக் செய்த அனைவரும் ரூபா டிசைன் செய்த ஆடைகளை அணிந்திருந்தனர்.
ரூபாவும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர். ராம்ப் வாக் செய்த அந்த 5 பேரும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ள பிறருக்கு ஆதரவும், நம்பிக்கையும் அளித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications