போதையில் கார் ஓட்டிய நடிகர் நாகார்ஜூனாவின் மருமகள் கைது
ஹைதராபாத்: போதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக நடிகர் நாகர்ஜூனாவின் சகோதரி மகளை ஹைதராபாத் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த சகோதரி அனுமோலு நாகா சுசீலா. இவரின் மகள் சாஹித்யா, கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சாலையில் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த டிராபிக் போலீஸார் அவருக்கு ஆல்கஹால் சோதனை செய்தனர்.

அப்போது அவருடைய இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு அரசு அனுமதித்துள்ள அளவை விட அதிகமாக இருந்ததால் சாஹித்யாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கார் அவரது தாத்தா அக்கினேனி நாகேஸ்வர் ராவ் பெயரில் உள்ளது.
இதனையடுத்து சாஹித்யாவை கைது செய்த போலீசார் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். நாளை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாகார்ஜுனனின் சகோதரி மகள் போலீஸில் பிடிபட்ட விஷயம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று மட்டும் இவ்வாறு குடித்து விட்டு கார் ஓட்டியதாக மொத்தம் 23 கார்கள் பறிமுதல் செய்யபட்டு உள்ளன. இத்தகவலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீனிவாச ரெட்டி தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications