கலாபவன் மணி மர்ம சாவு.. சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு பரிந்துரை! குடும்பத்தார் வரவேற்பு
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணி மர்ம சாவு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்துள்ளது கேரள மாநில அரசு. இதுதொடர்பாக சிபிஐக்கு இன்று அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த நடவடிக்கையை மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். உண்மை வெளியே வர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
45 வயதான கலாபவன் மணி கடந்த மார்ச் 6ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது தடயவியல் ஆய்வில் அவரது உடலில் நச்சுத்தன்மை கொண்ட பொருள் இருந்தது தெரியவந்தது. எனவே சாவில் சதி இருப்பதாக மணி குடும்பத்தார் குற்றம்சாட்டினர்.

கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி அரசு அமைந்த நிலையில் கலாபவன் மணி குடும்பத்தினர் அண்மையில் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தனர். அப்போது கலாபவன் மணியின் மரணம் குறித்த விசாரணையில் திருப்தி இல்லை என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பினராயி விஜயனிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று இன்று கேரளா அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளா காவல்துறை தலைவர் லோக்நாத் பெகெரா சிபிஐக்கு பரிந்துரைத்து இன்று கடிதம் அனுப்பினார்.
இந்த நடவடிக்கையை மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். உண்மை வெளியே வர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications